districts

img

புதுப்பாளையத்தில் மகளிர் தின கருத்தரங்கம்

கடலூர்,மார்ச் 18- சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி  மகளிர் தின கருத்தரங்கம் கடலூர் புதுப்பாளையத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு உழைக் கும் பெண்கள் ஒருங்கி ணைப்பு குழுவின் அமைப் பாளர் கே.சாவித்திரி தலைமை தாங்கினார். இணை அமைப்பாளர் எஸ்.சாந்தகுமாரி வரவேற்றார். உழைக்கும் பெண்கள் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் இணை அமைப் பாளர் டி.டெய்சி சிறப்புரை யாற்றினார். பணியிடங்களில் பாலியல் புகார் சம்பந்தமாக விசாக கமிட்டி அமைக்க வேண்டும், உழைக்கும் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் பி. கருப்பையன், டி.பழனிவேல், எம். மனோ ரஞ்சிதம், மீரா உள்ளிட்ட பலர் பேசினர்.