districts

மின்சாரம் தாக்கி பெண் பலி

சிதம்பரம், ஜூலை. 12-

     சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (28). இரது வீட்டின் எதிர்ப்புறத்திலுள்ள அருண்குமார் வீட்டைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. செவ்வாய் கிழமை (ஜூலை 11)  இரவு அந்தப் பகுதியில் அடித்த பலத்த காற்றால் மின்கம்பி அருந்து கம்பி வேலியில் விழுந்துள்ளது.  

    இதனைக் கவனிக்கா மல் புதன்கிழமை (ஜூலை 12) அன்று துணி காய வைத்த முத்துலட்சுமி மின்சாரம் தாக்கி  தூக்கி வீசப்பட்டார்.  மயக்க நிலையில் இருந்த அவரை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரு கிறார்கள்.