‘விட்னஸ்’ திரைப்படம் திரையிடல் மற்றும் விவாத நிகழ்ச்சி வியாழனன்று (பிப்.16) பாரிமுனையில் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்டக்குழு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற நீதிபதி து.அரிபரந்தாமன், கதாசிரியர் முத்துவேல், திரைக்கலைஞர்கள் ரோகிணி, சண்முகராஜன், ஜி.செல்வா, சமத்துவ வழக்கறிஞர் சங்க மாநிலச் செயலாளர் த.பார்வேந்தன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார், சென்னை மாவட்டத் தலைவர் பி.பாலசுப்ரமணியம், செயலாளர் பி.சீனிவாசன், துணைச் செயலாளர் கே.காஞ்சனா தேவி உள்ளிட்டோர் பேசினர்.