districts

img

மாநகர போக்குவரத்து கழகத்தில் குறைதீர் கூட்டம்

சென்னை, அக். 3 - மாற்றுத்திறனாளிகள் சங்கம் மற்றும் சிஐடியு தலையீட்டை தொடர்ந்து, மாநகரப் போக்கு வரத்து கழகத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற குறைதீர் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகத்தில் உள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வலி யுறுத்தி துறைச் செயலாளர் பனீந் தர் ரெட்டியிடம் தமிழ்நாடு அனைத் துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் வலியுறுத்தி யது. இதனையேற்று செவ்வா யன்று (அக்.3) குறைதீர் கூட்டம்  நடத்த அறிவுறுத்தி மேலாண் இயக்கு நர்களுக்கு, துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பினார் இந்நிலையில், மாநகர போக்கு வரத்து கழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து பொறுப்பு மேலாண்மை இயக்குநர் குணசேகரனை சந்தித்து, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச்செயலாளர் எம்.தயாளன், பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி, மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஜெயச்சந்திரன், எஸ்.ராணி (வடசென்னை), எஸ்.மனோன்மணி, என்.மனோகரன் (மத்தியசென்னை), ஆர்.லாரன்ஸ் சகாய ஆரோக்கிய ராஜ் (தென்சென்னை) ஆகியோர் மனு அளித்து பேசினர். அப்போது, மாநகர் போக்கு வரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர், நடத்துனர்களில் சிலருக்கு  பார்வை குறைபாடு, செவித்திறன் இழப்பு, நீரிழிவு நோய், விபத்தினால் கை, கால் செயலிழப்பு மற்றும் எலும்பு முறிவு, தண்டுவடம் மற்றும் கழுத்து எலும்பு பாதிப்பு, இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றோராக மாறியுள்ளனர். ஒரு சிலர் மருத்துவ பரிசோதனையின் போது 40 விழுக் காட்டிற்கு  மேல் பாதிக்கப்பட்டு,

மாற்றுத்திறனாளிகளாக கண்டறியப்பட்டனர். அத்தகை யோரும் பணி செய்ய தகுதியிழந் துள்ளனர். இத்தகைய தொழிலாளர் களுக்கு பொருத்தமான பணியிடம் காலியாகும் வரை அல்லது பணி ஓய்வு பெறும் வரை சிறப்பு பதவி யிடம் உருவாக்கி பணி வழங்க  வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் சட்டம் குறிப்பிடுகி றது. எனவே, ஊனமுற்ற தொழி லாளர்களுக்கு நிரந்தர மாற்றுப்  பணியும், மருத்துவக் குழுமத்தால்  தகுதியிழப்பு சான்று பெற்றவர்க ளுக்கு தொடர்ந்து மாற்றுப் பணியும் வழங்க வேண்டும். மருத்துவ பரிசோதனைக்கு செல்லாதவர்களை பரிசோதித்து, அதில் மாற்றுத்திறனாளி என கண்டறியப்பட்டால் நிரந்தரம் அல்லது தற்காலிகமாக மாற்றுப் பணி வழங்க வேண்டும். மேலும்,  குறைதீர் கூட்டத்தில் அனைத்து  மாற்றுத்திறனாளி தொழிலாளர்க ளும் பங்கேற்கும் வகையில் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினர். இதனையடுத்து அனைத்து  மாற்றுத்திறனாளி தொழிலாளர்க ளும் பங்கேற்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்பட்டது.