districts

புதிய தொழில்நுட்பங்களுடன் ஸ்பிலிட் ஏசி அறிமுகம்

சென்னை, பிப்.19 - கோடைக்காலம் துவங்கி விட்டதால் குளிர்சாதனங்க ளின் தேவை அதிகரித்துள் ளது. குளிர்சாதனங்களை தயாரிப்பதில் உலகின் முன்னணி  நிறுவனமான ஜப்பானின் டெய்கின் இந்தியா  நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களுக்காக உள்நாட்டிலேயே வடிவமை க்கப்பட்ட  புதிய வகை ஸ்பி லிட் ஏசிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வகை குளிர் சாதனத்தில் எதிர்காலத் திற்கேற்ப தொழில்நுட்பங் கள் உள்ளன, வைபை  மூலமாக இருக்கும் இடத்தில் இருந்தே இந்த  சாதனத்தை கட்டுப்படுத் தமுடியும். டெய்கின் நிறு வனத்தின் ஆராய்ச்சிகளில் காற்றின் தரம் மற்றும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது என்று நிறுவனவத் தின்  மண்டல இயக்குநர் என். கே. ராவ் கூறினார்.  150  சதுர அடி இடம் என்பது  வீடுகள் மற்றும் அலுவல கங்களுக்கும் பொருந்துவ தால் புதிதாக அறிமுகப்படுத் தப்பட்டுள்ள டெய்கின் ஏசிகள் ஒவ்வொருவருக்கும் கச்சிதமான குளிர்ச்சி மற்றும் காற்றின் தரத் தேவைகளை வழங்குகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்சாதன தீர்வுக ளைப் பெறுவதற்கு நுகர் வோருக்கு டெய்கின் ஏசி சிறந்த தேர்வாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.