districts

img

100 வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்

புதுச்சேரி, செப்.20- தேசிய கிராமப்புற வேலை  உறுதி திட்டத்தில் வேலை நாட்களாக 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று சிபிஎம் வில்லியனூர் நெட்டப்பாக்கம் கொம்யூன் மாநாடு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி வில்லியனூர் -நெட்டப்பாக்கம் கொம்யூன் கமிட்டியின் 7வது  மாநாடு பாகூரில், தோழர் டி.தெய்வானை நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கதிரவன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை மூத்த உறுப்பினர் க.தியாகராஜன் ஏற்றிவைத்தார்.  மாநில செயற்குழு உறுப்பினர் வெ.பெருமாள்  மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநாட்டு வேலை அறிக்கையை கொம்யூன் செயலாளர் ராமமூர்த்தி தாக்கல் செய்தார். மாநிலசெயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன் ,சத்தியா, மாநிலக்குழு உறுப்பினர் ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இறுதியாக புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநாட்டில்  கொம்யூன் செயலாளராக எஸ்.ராமமூர்த்தி தேர்வு  செய்யப்பட்டார். தீர்மானம் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்கள் 200 நாட்களாக உயர்த்தி நாள் ஒன்றுக்கான கூலி ரூ.600 வழங்க வேண்டும். ரேசன் கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும்.மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.