districts

img

திருமுல்லைவாயல் ஜாக் நகர் பூங்கா சீரமைக்கப்படுமா?

சென்னை, ஜூலை 12-

     ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயல் 10ஆவது வார்டுக்குட்பட்ட பகுதி ஜாக் நகர். இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில்  உள்ள பூங்காவை தினசரி சிறுவர்கள், பெரியவர்கள், நடை பயிற்சி மேற்கொள் வோர் என 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் முறையான பராமரிப் பின்றி இந்த பூங்கா கடந்த ஒரு வருடமாக பழுதடைந்து காணப்படுகிறது. விளை யாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகின்றன. இதனால் சிறு வர்கள் விளையாட முடியாமல் அவதிப்படு கின்றனர். மேலும் நடைபாதையும் சேத மடைந்துள்ளதால் முதியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின் கம்பங்க ளில் பாதுகப்பற்ற முறையில் வயர்கள் வெளியே தெரிவதால் சிறுவர்களை, குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்துவர பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.

    சுற்றுச் சுவர் இல்லாததாலும், மின் விளக்குகள் எரியாததாலும் இரவு நேரங்க ளில் சமூக விரோத செயல்கள் நடைபெறு வதாகவும், பெண்கள் அந்தப்பக்கம் செல்ல  முடியாத நிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் கடந்த மார்ச்  8ஆம் தேதி மேயரிடம் பூங்காவை சீரமைத்து தர கோரிக்கை வைத்தும் இதுவரை சீரமைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிபிஎம் மாமன்ற உறுப்பினர்  அ.ஜானிடம் கேட்டபோது, இதுகுறித்து மாமன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் சீரமைக்கப்படும் என்று அதிகாரி கள் தெரிவித்தனர். ஆனால் பல மாதங்கள் கடந்தும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக மாநக ராட்சி நிர்வாகம் பூங்காவிற்கு சுற்றுச்சுவர் அமைத்து, மின் விளக்குகள், நடை பாதை களை சீரமைக்க வேண்டும். புதிய விளை யாட்டு உபகரணங்களை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை யென்றால் மக்களை திரட்டி போராடுவ தைத் தவிர வேறு வழியில்லை என்றார்.