districts

img

கடலூர் மக்களின் அரசு மருத்துவக்கல்லூரி கனவு நனவாகுமா?

கடலூர், மார்ச் 18- ஒன்றிய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. இந்தியா நிறுவனம்,  முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்துக்கு புகழ்பெற்ற பண்ருட்டி, ஆங்கிலேயர் காலத்தில் கடலூரில் கட்டப்பட்ட புனித டேவிட் கோட்டை, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை, நெல்லிக்குப்பம் இ.ஐ.டி.பாரி  உள்ளிட்ட சர்க்கரை ஆலை கள் ஆகியவற்றை உள்ளடக்கிய  பகுதியாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி உள்ளது. தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கடலூர் நாடாளுமன்ற தொகுதி யில் இருந்தன. 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, உளுந்தூர்பேட்டை தொகுதி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியிலும், ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் சேர்க்கப்பட்டன. அதற்கு பதி லாக முன்பு சிதம்பரம் நாடாளு மன்ற தொகுதியில் இருந்த குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகள் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்டன.  தற்போது கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதி களுடன் கடலூர் நாடாளுமன்ற தொகுதி உள்ளது. இதுவரை 17  பொதுத் தேர்தல்களை சந்தித் துள்ள கடலூர் தொகுதியில் அதிக முறை வென்ற கட்சியாக காங்கிரஸ் உள்ளது. 

திமுக கூட்டணிக்கு பலம்

2021-ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற பொதுத்தேர்தலில் இந்த  தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற  தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய  தொகுதிகளை தி.மு.க. கைப் பற்றியது. விருத்தாசலத்தில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வெற்றி பெற்றது.  இதன் மூலம் கடலூர் நாடாளு மன்ற தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் தி.மு.க. கூட்டணிக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது. இதனால் இந்த வாய்ப்பை எளிதில் விட்டு  விடக்கூடாது என்றும் தி.மு.க.வும் முனைப்பு காட்டி வருகிறது. இந்த தொகுதியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்  என்று போராடி வருகிறது.

கோரிக்கைகள்

ஏற்கெனவே கடலூர் அருகே எஸ்.புதூரில் அடிக்கல் நாட்டப் பட்ட இடத்தில் புதிய மருத்துவக்  கல்லூரி அமைய வேண்டும் என்று கடலூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கின்றனர். முந்திரிக்கொட்டை இறக்கு மதியை தடை செய்து பண்ருட்டி முந்திரி விவசாயத்தை பாது காக்க வேண்டும். விருத்தாசலத்தில் செராமிக் தொழிற்சாலையை புனரமைக்க வேண்டும். கடலூர் துறைமுகத்தை விரிவுபடுத்தி கப்பல் போக்கு வரத்தை உருவாக்கி தொழிலா ளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். நெல், மணிலா, வாழை,  உளுந்து பலா உள்ளிட்டவை களுக்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நிரந்தரப்படுத்தி பொது துறையாக பாதுகாக்க வேண்டும். பங்கு விற்பனை தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயிகள் மீனவர்கள்  நிறைந்ததொகுதி

முந்திரி, பலா உள்ளிட்ட மாறு பட்ட விவசாயம் மீனவர்கள், கைத்தறி நெசவாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களும் ஒருங்கே பெற்ற தொகுதியாக கடலூர் நாடாளுமன்ற தொகுதி விளங்குகிறது. தற்போதைய களநிலை மைபடி கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணியில் அறிவிக் கப்படும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாக உள்ளது. - வ.சிவபாலன்