districts

img

மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுமா? சமுதாயக் கூடம்

விழுப்புரம், நவ. 15- விழுப்புரத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் கடந்த 11  ஆண்டுகளாக பூட்டி கிடக்கி றது. அதனை பயன்பாட் டிற்கு கொண்டு வர  வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் நகராட்சிக் குட்பட்ட 25ஆவது வார்டில் கமலா கண்ணப்பன் நகர்,  கோவிந்தசாமி நகர், பால சுப்ரமணியன் நகர், நடரா ஜர் லேஅவுட் என பல பகுதி கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த  2011ஆம் ஆண்டு அப் போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம்  கட்டப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு திறக்கப் பட்டது. ஆனால் திறந்த நாள் முதல் இன்று வரை அந்த  சமுதாயகூடம் பயன் பாடின்றி பூட்டியேக் கிடக்கி றது. இதனால் அங்கு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே சமுதாயக்கூடத்தை உடனடி யாக திறந்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.