அம்பத்தூர், ஆக. 18-
அம்பத்தூர் தொகுதியில் பல ஆண்டாக அரசு பொது மருத்துவமனை இன்றி பொதுமக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப் பட்டு வருகின்றனர். இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பத்தூர் தொகுதியில் அம்பத் தூர் தொழிற்பேட்டை, பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ.நகர், பாடிகுப்பம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக் கின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் 1,800 மேற்பட்ட சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. மேலும், இங்கு 100க்கும் மேற்பட்ட ஏற்று மதி ஆடை நிறுவனங்களும், மென் பொருள், தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களும் உள்ளன.
அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்ட ங்களில் இருந்து தினசரி சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் வேலைக்கு வந்து செல்கின்ற னர். இங்குள்ள தொழிற்சாலைகளில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கி யிருந்து வேலை செய்கின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வாகன போக்குவரத்தை நம்பி வரு கின்றனர். இந்த பகுதியில் சி.டி.எச் சாலை, அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, அம்பத்தூர் - வான கரம் சாலை, கொல்கத்தா நெடுஞ் சாலை அம்பத்தூர் தொழிற்பேட்டை நெடுஞ்சாலை, தாம்பரம் - புழல் புற வழிச் சாலை உள்ளிட்ட நெடுஞ்சாலை கள் உள்ளன. இதனால் அம்பத்தூர் பகுதியில் உள்ள சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதனால் அடிக்கடி சாலை விபத்து கள் ஏற்படுகின்றன. இதில் பொது மக்கள், வாகன ஓட்டிகள் படுகாயம் அடைவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகி றது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கண்ட சாலைகளில் விபத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகி யுள்ளனர். ஏராளமானோர் ஊனமாகி யுள்ளனர். மேலும் தொழிற்சாலைகளில் பணியின் போது ஏற்படும் விபத்துக் களில் படுகாயம் அடைந்த தொழி லாளர்களுக்கு சிகிச்சை அளிக்க அம்ப த்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் அரசு மருத்துவமனை இல்லை.
இதனால் விபத்தில் காயமடைந்த வர்களை அவசர சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. இவ்வாறு சென்னைக்கு சிகிச்சைக்கு செல்லும் போது சி.டி.எச் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை களில் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சமயங்க ளில் அவசர ஊர்தி விரைவாக செல்ல முடியவில்லை. ஊசலாடிக் கொண்டிருக்கும் உயிர்களை காப் பாற்றமுடியாமல் போகுகிறது. அற்புத மான மனித உயிரை காக்க அம்பத்தூ ரில் படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்ற னர். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. எனவே அம்பத்தூ ரில் பொதுமக்கள், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் படுக்கை வசதி யுடன் கூடிய நவீன அரசு பொது மருத்து வமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.