districts

img

கடலூர் சிறையில் கணவர் மரணம்! நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு

கடலூர்,ஆக.23 - கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசி குளத்தை சேர்ந்தவர் காந்திமதி. இவரது கணவர்  பாஸ்கரன் (39). இம் மாதம்  8 ஆம் தேதி கருவேப்பிலங் குறிச்சி காவல் நிலையத்தை சேர்ந்த காவல் உதவி ஆய் வாளர் சிவராமன் மற்றும் 4 காவலர்கள் இவரது வீட்டிற் குள் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, காந்திமதி யும் அவரது கணவரும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவலர் கள், சிவராமனை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், கஞ்சா வைத்திருந் ததாக உண்மைக்கு மாறாக வழக்குப்பதிவு செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, ஆக. 12 மற்றும் 16 ஆகிய  இரண்டு நாட்கள் கணவனை  பார்ப்பதற்கு காந்திமதி சென்றார். அப்போது, தனக்கு ‘‘பயமாக இருக்கி றது. உடனடியாக ஜாமினில்  வெளியே அழைத்து செல்லுங்கள்’’ என்று கூறி யுள்ளார். இந்த நிலையில், பாஸ்கருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் ஊராட்சி மன்றத் தலைவர் மூலம் காவல்துறையினர் ஆக. 20 அன்று தகவல் தெரி வித்துள்ளனர்.  இந்த தகவலை காந்தி மதி அறிந்ததும் அரசு மருத்து வமனைக்கு சென்றபோது, பாஸ்கரன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். கணவர் பாஸ் கரன் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் நீதி கிடைக்க என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்களு டன் மாவட்ட ஆட்சியரை சந்தித்த காந்திமதி புகார்  மனு ஒன்றையும் கொடுத் தார். அப்போது, மாவட்டச்  செயலாளர் கோ.மாதவன்,  மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி. சுப்புராயன், மற்றும் பாஸ்கர் குடும்பத்தினர் உடனிருந்தனர்.