1922டிசம்பர் மாதம் 19ஆம் நாளில் திருவாரூருக்கு அருகிலுள்ள காட்டூரில் பிறந்தார். அவருடைய தந்தை திரு. கல்யாணசுந்தரம், தாய் சொர்ணாம்பாள். இவருக்கு முதலில் ராமையா என்னும் பெயர் சூட்டப்பட்டது.
பெரியார்மீது ஈடுபாடு
தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட பற்றால் ராமையா என்ற தனது இயற்பெயரை, அன்பழகன் என மாற்றிக்கொண்டார். அன்ப ழகனின் தந்தை காங்கிரஸ் இயக்கத்தின் மீது அபிமானம் கொண்ட வர்.1925இல் பெரியார் காங்கிரசி லிருந்து வெளியேறியபோது, அவ ருடன் சேர்ந்து வெளியேறியவர். சிறு வயதில் தந்தையாருடன் சேர்ந்து பெரியாரின் பொதுக்கூட்டங்க ளுக்குச் சென்றுஅவருடைய பேச்சு களைக் கேட்பது அன்பழகனின் வழக்கம். ஆகவே, சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அரசியல் மீது அவருக்கு ஓர் ஈடுபாடு தோன்றியது. படித்த காலத்தில் தந்தை பெரியார் அவர்களின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், பேரறிஞர் அவர்களின் தமிழ் உணர்வுமிக்க பேச்சாற்றாலால் ஈர்க்கப்பட்டார். அதனாலே பொது வாழ்க்கை மீது அவருக்குப் பிடிப்பு உண்டானது. 1942ஆம் ஆண்டில் திருவாரூர் விஜயபுரத்தில் இஸ்லாமிய இளை ஞர்கள் இணைந்து நடத்திய சிக்கந்தர் விழாவில் பேரறிஞர் அண்ணா கலந்துகொண்டார். அவரைப் பார்க்க வந்த கலை ஞர் கருணாநிதியும் பேராசிரியர் அன்பழகனும் ஒருவருக்கொருவர் அறிமுகமாயினர். அதைத் தொடர்ந்து அன்பழகன் அவர்களை ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார் கருணாநிதி. அப்போது உருவான நட்பு 76 ஆண்டுகள் நீடித்தது. பேராசிரியர்தனது 26-ஆம் வயதில், 1948 ஆம் ஆண்டு தைப் பொங்கல் நாளில் `புதுவாழ்வு’ என்னும் மாத இதழை வெளியிட்டார். இதன் வாயிலாகத் தனது எழுத்துப் பணியைத் தொடங்கினார். `புது வாழ்வு’ பத்து மாதங்கள் மட்டுமே வெளிவந்தது. என்.எஸ்.கிருஷ்ணன், டாக்டர்மு.வரதராசன், இரா.நெடுஞ்செழியன் முதலியோர் இந்த இதழில் கட்டுரைகள் எழுதி யுள்ளார்கள். மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் மாணவர்களின் பங்கு மகத்தானது என்பதை நன்குணர்ந்த வர் அவர். நீதிக்கட்சி தொடங்கி 100 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட வரலாறு கொண்டது திராவிட இயக்கம். பல்வேறு காலக்கட்டங்களில் தலைவர்கள் பலர் தங்களது பங்களிப்பினைத் தமிழ் நாட்டுக்கும், தமிழ் இன மக்க ளுக்கும், தமிழ் மொழிக்கும் தந்துள்ளார்கள். பேராசிரியர் காலத்தில், மாணவர் சமுதாயம் அரசியல் மாற்றத்துக்குமுக்கியப் பங்காற்றியது. பள்ளிப் பரு வத்திலேயே தமிழ்மொழியின்மீது தணியாத தாகம் கொண்டிருந்த தால், அண்ணாமலை பல்கலைக்கழ கத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார்.
பேரறிஞர்அண்ணாவின் வேண்டு கோளுக்கு இணங்க 1944 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரையில் சென்னை பச்சை யப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய காரணத்தால் அவ ருடைய பெயரில் முன்னொட்டாக 'பேராசிரியர்' என்னும் சொல் ஒட்டிக்கொண்டது. பேராசிரியர் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணி யாற்றியுள்ளார். 1962 ஆம் ஆண்டு சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 1967 ஆண்டு தொடங்கி 1971 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும்செயல்பட்டுள்ளார். அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி முதலமைச்ச ரானார். அந்தக் காலகட்டத்தில் 1971இல் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் அன்பழகன். சுகா தாரத்துறை என்றிருந்த பெயரை, மக்கள் நல்வாழ்வுத் துறை என மாற்றியவர் அன்பழகன்தான். தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இரண்டு முறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்; ஒரு முறை நிதியமைச்சராகவும் தனது செயல் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் க. அன்பழகன் 1977ஆம்ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக வும் இருந்துவந்தார். அன்பழகனின் மனைவி வெற்றிச் செல்வி. இந்தத் தம்பதியினருக்குச் செந்தாமரை, மணவல்லி என இரு மகள்களும் அன்புச்செல்வன் என்னும் மகனும் இருக்கிறார்கள். சமூக சீர்திருத்தம், இன மொழி, வகுப்புரிமை, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகி யோரைப் பற்றிய நூல்களை பேராசிரியர் எழுதியுள்ளார்.
பிராமணன் பிறக்கவில்லை, இன முழக்கம்,மாமனிதர் அண்ணா, The Dravidian Movement, வகுப்புரிமைப் போராட்டம், தமிழர் திருமணமும் இனமானமும், ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’, ‘வாழ்க திராவிடம்’, திராவிட இயக்கத்தின் தோற்றமும் தேவையும் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார் க. அன்பழகன். அரசியலில், ஆட்சிப் பணியில், அளப்பரிய பல சாதனைகளை, சரித்திரங்களை நிகழ்த்தி இருந்தாலும், எழுத்துப் பணிக்கு என்றுமே அவர் ஓய்வு தந்ததில்லை. பேராசிரியரின் மேடைப் பேச்சு ஆற்று நீரோட்டம் போன்று தெளி வானது. குளுமையும் இருக்கும் துள்ளலாகவும் இருக்கும். பல்கலைக்கழகத்தில் பயின்ற நாள்களிலும், துணைப் பேராசிரியாகப் பணியாற்றிய காலத்திலும் திராவிட இயக்கத்தின் பால் பெரிதும் ஈடுபாடு கொண்டி ருந்தார். அந்த ஈடுபாடுதான் அவரைப் பொதுவாழ்க்கை நோக்கித் திருப்பியது. பேரறிஞப் பெருந்தகை அண்ணா பங்கேற்ற விழாவில், பேராசிரி யர் ஆற்றிய உரையே அவர்வாழ்க்கை யில் திருப்பு முனையாக அமைந்தது. அமைச்சராக பதவி வகித்த துறை களில் எல்லாம் தனது முதிர்ந்த அனு பவத்தாலும், பரந்த தொலை நோக்குப் பார்வை யாலும்பல்வேறு திட்டங்களைத் திறம்பட செயல் படுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து, பேராசிரியர் அன்பழகன் “என் அன்புக்குரிய தம்பி மு.க.ஸ்டாலின் தந்தையைப் போலவே உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக்கொண்டவர். மக்கள் பணியில் சட்டமன்ற உறுப்பினராக, சென்னை மாநகர மேயராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராகப் பணி யாற்றிப் படிப்படியாக உயர்ந்துஉச்சம் தொட்டவர். காலமும் கடமையும் என்றும் தவறாதவர்.
சட்டமன்றத்தில் புள்ளி விவரத்துடன் திறம்படப் பதில் அளிப்பதில் என்றுமே சளைக்காதவர்” என்று பாராட்டியுள்ளார். பேராசிரியரின் நூற்றாண்டை முன்னிட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த நிதித்துறை வளா கத்தில் பேராசிரியரின் சிலையைத் திறந்து வைத்தார். ஏறத்தாழ 1,20,000 சதுர அடி யில்இயங்கி வரும் இந்த வளாகத்தில், கருவூலகணக்குத் தொடர்பான அலுவலகங்கள், ஓய்வூதிய இயக்ககம், மாநில, உள்ளாட்சி மற்றும் கூட்டுறவுத் தணிக்கை அலுவலகங்கள் மற்றும் அரசு சிறு சேமிப்புத் துறை உள்ளிட்ட 15 அலுவலகங்கள் இயங்கி வரும் இவ்வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் மாளிகை” என்று பெயர் சூட்டினார். நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள அவருடைய நூல்களுக்கான காப்புரிமைத் தொகையை அவரது குடும்பத்தாருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
கல்வித்துறையில் பேராசிரியர் அன்பழகன்
பேராசிரியர் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்ட காலங்களில் தமிழ்நாடு அரசு கல்விக்காகச் செயல்படுத்திய பல திட்டங்கள் இன்றும் நினைவுகூரத்தக்கவை. 1990-91 கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் சேரும் கிராமப்புற மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 1996 - 2000 காலகட்டத்தில் 965 தொடக்கப் பள்ளிகள் புதி தாகத் தொடங்கப்பட்டிருந்தன. பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவரது உயர் கல்விச் செலவை அரசே ஏற்றுக்கொண்டது. 666 பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பில் கணினிப் பாடம் தொடங்கப்பட்டது. இப்போது தமிழ்நாடு அடைந்திருக்கும் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சிக்கு அப்போதுதான் அடித்தளமிடப்பட்டது. 1996-2000 வரையான காலகட்டத்தில் 6 முதல் 14 வயதுள்ள 27,000 குழந்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களுக்கு இலவச பாடநூல்கள் வழங்கப்பட்டன. இதனால் ஏழை எளிய மாணவரது அடிப்படைக் கல்வி வளர்ச்சிச் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது. 100 கிராமப்புற மாணவருக்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டில் தான் உயர்கல்வித் துறை தனியாக உருவாக்கப்பட்டது. 1997-98இல் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டது. திருச்சியில் கி.ஆ.பெ. விசுவநாதம் பெயரில் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 17.09.1997 அன்று பெரி யார் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்டது. பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து தொழில் கல்வியில் சேர்ந்த முதல் 10 நிலை மாணவர்களின் உயர் கல்விச் செலவை அரசு ஏற்றுக் கொண்டது. உயர்கல்வியில் தமிழைப் பயிற்றுமொழியாக்குவது குறித்து ஆராய டாக்டர் கலை ஞர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் செயல் தலைவராக தமிழண்ணல் நிய மிக்கப்பட்டார். இவையெல்லாம் பேராசிரியர் க அன்பழகன் அவர்கள் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் சில.
(பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவையொட்டி மாநில அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட கட்டுரை)