districts

img

பழவேற்காடு ஏரியில் பறவைகள் திடீரென இறக்க காரணம் என்ன?

பழவேற்காடு ஏரியில் பறவைகள்  திடீரென இறக்க காரணம் என்ன? சென்னை, பிப். 25- பழவேற்காடு ஏரியில் கழிவுநீர் கலந்ததால் பறவைகள் இறந்ததாக பரிசோதனையில் தெரிய  வந்துள்ளது. சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி  பறவைகள் சரணாலய பகுதியில் பூநாரை,வர்ண நாரை, கூழைக்கடா, கடல்பொந்தா, ஊசிவால் வாத்து, உல்லான் பறவைகள் என 126 வகையான பறவை இனங்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவேற்காடு பகுதியில் உள்ள அண்ணா மலைச்சேரியில் இருந்து, 2 கி.மீ. தூரத்தில் ஏரியின் மையப்பகுதியில், உல்லான் பறவைகள், ஊசி வால் வாத்து, நாரை உள்ளிட்ட பறவைகள் கொத்து கொத்தாக இறந்தன. பறவைகளின் உடல்கள் அழுகிய நிலையில் சிதறி கிடந்தன. இதையடுத்து பழ வேற்காடு பறவைகள்  சரணாலயத்தின் வனத் துறை அலுவலர்கள் அங்கு முகாமிட்டு, இறந்து கிடந்த பறவை களை சேகரித்தனர். பின்னர் கால்நடை மருத்துவக் குழுவினர்  இறந்த பறவைகளை நாமக்கல்லில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இறந்து போன பறவைகளுக்கு லோ பெத்தொ ஜெனிக் ஏவியன் இன்புளூயன்சா எனப்படும் பறவை காய்ச்சல், ராணிக்கெட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் மற்றும் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா தொற்று நோய் ஆகியவை இருக்கலாமா என்று பரிசோதிக் கப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் இறந்த பறவைகளின் உடலில் எஸ்கெரிச் சியா கோலி எனப்படும் இ-கோலி பாக்டீரியாக்கள் இருப்ப தும் தெரிய வந்தது. இது மனிதர்கள் மற்றும் விலங்கு களின் குடலில் வாழ்கிறது. இந்த பாக்டீரியாக்கள் மலம் மூலம் வெளியேற்றப்படுகிறது. ஏரியில் கழிவுகள் கலப்பதால் இந்த பாக்டீரியாக்கள் தண்ணீரில் கலந்து  பறவைகளை தாக்கி இருக்கலாம் என்று சந்தேகப்படு கிறது. இதையடுத்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பழவேற்காடு ஏரியில் இருந்து தண்ணீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதன் முடிவு கள் இந்த வார இறுதியில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பிறகே பழவேற்காடு ஏரியில் பறவைகள் இறந்ததற்கான காரணங்கள் தெரியவரும்.