வேலூர் ஜூலை 10 - வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம் கம்மவான்பேட்டை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி பங்கேற்று 137 பயனாளிகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன். கணியம்பாடி ஒன்றியக்குழுத் தலைவர் திவ்யா கமல்பிரசாத். மகளிர் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், வேளாண் இணை இயக்குநர் சோமு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.பானுமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தேவி சிவா, ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முருகன், வட்டாட்சியர் முரளிதரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.