districts

img

களைகட்டிய சென்னை உணவு திருவிழா

சென்னை, டிச.22- சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்  வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வரும் உணவு திருவிழா விற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்து வருகின்றனர். சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர் உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் தயாரித்து 35 அரங்குகளில் வழங்கி வருகின்றனர். டிசம்பர் 20ம் தேதி தொடங்கிய உணவு திருவிழா டிசம்பர் 24ம் தேதியன்று முடி வடைகிறது. மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை உணவு திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பையில் இருந்து உணவு திரு விழாவை காண குடும்பத்துடன் வருகை தந்த பெண்களில் சிலர் கூறுகையில், பனை ஓலையில் செய்த கொழுக்கட்டை மிகவும் புதுமையாகவும் சுவையாகவும் இருந்தது. ஓலையில் வைத்து கொழுக்கட்டை செய்யும் பொழுது அந்த பனை ஓலையின் வாசத்துடன் கொழுக்கட்டையின் சுவை நன்றாக இருந்தது. ஆரோக்கியமான உணவு  உணவு திருவிழாவில், எண்ணெய் மற்றும் அடுப்பு இல்லா முறையில் உணவு தயாரித்துக் கொடுத்து வரும் கிருஷ்ண கிரி ஊத்தங்கரை மகளிர் குழுவினர் கூறு கையில், “இயற்கை யான பச்சை காய்கறி களை பாரம்பரிய முறையில்வேக வைத்து கொடுக்கிறோம். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பாக யானை அரிசி, குள்ள கார அரிசி, கருப்பு கவுனி அரிசி, சிறு தானி யங்கள் என 34 வகை தானியங்களைக் கொண்டு எலுமிச்சை, புளி, தயிர் சோறு செய்கிறோம். காய்கறிகளில் சாலட் செய்து கொடுக்கிறோம்.குறிப்பாக பச்சைப்புளி ரசம், மோர், சாம்பார் அனைத்தும் எந்த பச்சை வாசனை வராமல் செய்து கொடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.