districts

img

செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் அருகே பண்டிதமேடு கிராமத்தில் புதன்கிழமை

செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் அருகே பண்டிதமேடு கிராமத்தில் புதன்கிழமை (நவ.28) ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்த 5 பெண்களின் வீடுகளுக்கு சென்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில், திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, கூடுதல் ஆட்சியர் அனாமிகா ரமேஷ்,திருப்போரூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு அறிவித்த தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.