districts

கூலி உயர்வு கேட்டு குடியாத்தத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், நவ, 11 – நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு பல ஆண்டுக ளாக உயர்த்தப்படும் இருக்கும் அடிப்படை கூலியை 30 விழுக்காடு உயர்த்த வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  வி.பி.சங்கர், என்.லெனின் ஆகியோர் தலைமை வகித்தனர். கு.தனசேகர், என்.பாபு, எஸ்.சந்திரன், த.மோகன், எஸ்.ஜோதி பாசு முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், வழக்கறிஞர் சு.சம்பத்குமார், மாவட்ட துணைத் தலைவர் பி.காத்தவராயன் முல்லை வாசன், வி.குபேந்திரன், சி.சர வணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து அகவிலைப்படியை அமுலாக்க வேண்டும். அரசு ஊழியர்கள் போல ஆண்டுக்கு இருமுறை பஞ்சப்படி வழங்க வேண்டும். ஒன்றிய அரசு கைத்தறி ரகங்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். குடியாத்தம் பகுதியில் கைத்தறி ஜவுளிப் பூங்கா பணியை துரிதப்படுத்த வேண்டும். தனியார் கைத்தறி முதலாளிகள் முத்தரப்பு பேச்சு வார்த்தையின் மூலம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வேண்டும். கைத்தறி சொசைட்டி களில் போலி உற்பத்தி முறையை தடை செய்து, சொசைடி ஊழியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும். நெல்லூர்பேட்டை என்.எஸ்.கிருஷ்ணன் நகரில் வீடு இடிக்கப்பட்ட நெசவாளர் உட்பட அனைவருக்கும் மாற்று இடம் உடனே வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.