districts

img

காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம், ஜன.04-  பல்வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி காஞ்சி புரத்தில் சிஐடியு  பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் மழையால் பாதிக்கபட்ட கைத்தறி நெசவாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10,000 உடனே வழங்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.5000 பென்சன் உயர்தி வழங்கிட வேண்டும். ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு காஞ்சிபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவு தொழி லாளர்கள் சங்கத்தினர்  (டிச.04) வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  காஞ்சிபுரம் கைத்தறி துறை அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு  சங்கத்தின் தலைவர் ஜி.லட்சுமிபதி தலைமை வகித்தார். இதில் சிஐடியு கைத்தறி சம்மேளன தலைவர் இ.முத்துக் குமார்,  சிஐடியு மாவட்ட தலைவர் டி.ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் கே.ஜிவா, மாவட்ட நிர்வாகிகள் ஜி.எஸ்.வெங்கடேசன், ஜிவசந்த உள்ளிட்டோர் கோரிக்கைகள் விளக்கி பேசினர்.