districts

img

அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை வென்றெடுப்போம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2020 ஜனவரி மாதம் 2 முதல் கலவையை தலைமையிடமாக கொண்டு புதிய கலவை தாலுகா உருவாக்கப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கலவை தாலுகாவில் 50 வருவாய் கிராமங்கள், 15 துணை கிராமங்கள் உள்ளடக்கிய 38 ஊராட்சி கள், 1 பேரூராட்சி இதில் 2 குறுவட்டங்கள், 13 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், 2 மாவட்ட ஊராட்சி வார்டு கள் அடங்கிய பகுதியாகும். கலவை தாலுகாவில் செய்யாறு, கமண்டல நாக நதி என இரு நதிகளும் வாழைப்பந்தலில் இணைந்து செல்கிறது. இங்கு பெரும்பாலும் விவ சாயம் முக்கியத் தொழில் ஆகும். ஏரி, கிணறு பாசனத்தை நம்பி உள்ளனர். பொதுப்பணித்துறை மூலம் 38 பெரிய ஏரிகள், 5 சிறிய ஏரிகள், மொத்தம் 43 ஏரிகள் பயன்பாட்டில் உள்ளன. ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 18 ஏரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் பராமரிப்பில் உள்ளது. ஒட்டு மொத்தமாக கலவை தாலுகாவில் 51 ஏரிகள் உள்ளன. விவசாயத்தில் பெருமளவு நெல் சாகு படி செய்தாலும் விவசாயி களுக்கு கட்டுபடி விலை கிடைக்காததாலும், அரசியல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் பெரும் நஷ்டம் அடைந்து விவசாயி கள் வேதனை அடை கின்றனர்.  கலவை தாலுகாவில் விவசாயத்திற்கு அடுத்த படியாக நெசவுத்தொழில் உள்ளது. ஆனால் நெசவுத்தொழில் ஒரு சில குறிப்பிட்ட கிராமங்களில் மட்டுமே ஈடுபட்டு வரு கின்றனர். நெசவுத் தொழி லில் இளைஞர்கள் ஈடு பட்டு வந்தாலும் சமூக பாது காப்பு, அடையாள அட்டை இல்லாததால் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. இந்த தாலுகாவில் உள்ள படித்த இளை ஞர்கள், பெண்கள் வேலைக்கு திருபெரும்புதூர், ஒரகடம், செய்யார் சிப்காட் போன்ற பணியிடங்களுக்கு பேருந்துகளில் பய ணித்து வேலை செய்து வருகின்றனர். இவர்க ளுக்கு எந்தவித சமூக பாது காப்பு, நிரந்தர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது எல்லாம் இல்லாமல் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்கின்றனர். கலவை அருகே உள்ள முள்ளுவாடி சிட்கோ தொழிற்பேட்டை துவங்கினால் அருகாமை யில் வேலை கிடைப்பதோடு, உழைக்கும் பெண்களுக்கு  பேருதவியாக இருக்கும். கலவை தாலுகா  2வது மாநாடு நடக்கும்  வாழைப்பந்தல்  கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  பிரதான தொழிலாக கைத்தறி நெசவுத் தொழி லாகும். இங்கு உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம், ஆரணி பட்டு சேலைகள் மற்றும் முகூர்த்த சேலைகள் உற்பத்தி செய்யும் 500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நிறைந்த பகுதியாகும். வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள கைத்தறி நெச வாளர்களுக்கு பலருக்கு இன்னும் தேசிய கைத்தறி நெசவாளர் அடையாள அட்டை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி  உப கரணங்கள் கிடைக்காததால் நெசவாளர்கள் வாழ்வா தாரம் பின்தங்கியே உள்ளது. மேலும் கைத்தறி நெசவாளர்களுக்கு  எந்த வித சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடையாது. எனவே, ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி  ஏழை, எளிய மக்களின் ஒளி விளக்காக திகழும் செங்கொடி இயக்கமானது குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 3 ஆண்டுகளில் கலவை தாலுகாவில் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளோம். இந்த  மாநாட்டில் அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க அடுத்த கட்ட போராட்டங்களை திட்டமிட கலவை வட்ட  2வது மாநாடு வாழைப்பந்தலில் நடைபெறுகிறது.