districts

img

பிஎஸ்என்எல் சொத்துக்களை பாதுகாப்போம்

தருமபுரி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் பிஎஸ்என்எல் சொத்துக்களை களவாடி விற்போர், நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வெள்ளியன்று (ஜூலை 19)  கிரீம்ஸ் சாலை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க அகில இந்திய துணைப் பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா, தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சீனிவாசன், ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் சி.கே.நரசிம்மன், பொதுச் செயலாளர் ஆர்.ராஜசேகர், மாவட்டத் தலைவர் கோதண்டம் உள்ளிட்டோர் பேசினர்.