districts

img

ஜனநாயகத்தை கருவறுக்க முயற்சிக்கும் பாஜகவை வரும் தேர்தலில் வீழ்த்துவோம்

கிருஷ்ணகிரி, ஏப்.16- கிருஷ்ணகிரி மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கோபிநாத்துக்கு ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் ராம்நகரில் பிரச்சாரம் நடை பெற்றது. ஓசூர் மாநகரச் செயலாளர் சி.பி.ஜெயராமன் தலைமையில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு பேசுகையில், பாஜக அரசை விமர்சித்த பெண் பத்திரி கையாளர் கௌரி லங்கேஷ், கல்புருக்கி, தபோல்கர் உள்ளிட்ட பலர் கொடூரமாக கொல்லப்படுவதும், ஒன்றிய அரசின் கைத்தடியான அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறைகள் மூலம் சோதனை செய்து எதிர்க்கட்சியினரை கொடூரமாக பழிவாங்குவதும் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு பிரதான வேலையாகவே செய்து வருகிறது.  மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம், சுதந்திரம் சட்டங்கள் கருவறுக்கப்படும், பாசிஸ்டுகள் ஆட்சியை விட கொடூரமான அடக்குமுறைகள் நடை முறையாகும் எனவே தயவு தாட்சண்யம் இன்றி பாஜக ஆட்சியும் அதன் தொங்கு சதையான அதிமுகவையும் விரட்டி அடித்திட வேண்டும் என்றார். இந்த பிரச்சாரத்தில் ஓசூர்  மாநகர மேயர் எ சத்யா, சிபிஎம் மாவட்ட செய லாளர் ஜிகே நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர்,கோவிந்தசாமி, சுரேஷ்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி,மாவட்ட குழு உறுப்பினர்கள்,சந்திரசேகர் அனுமப்பா, சீனிவாசன், ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி, வட்ட ஒன்றிய செயலாளர்கள்,ராஜா முனியப்பா, காங்கிரஸ் தலைவர்கள் தியாக ராஜன்,முரளிதரன்,திராவிடர் கழக தலை வர் வனவேந்தன், மனிதநேய மக்கள் கட்சி ஜாஹீர் ஆலம்,விசிக ராமச்சந்திரன், கலந்து கொண்டனர்.