கேரளா வயநாட்டில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடலூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வசூலிக்கப்பட்ட நிதி ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கேரளா முதல்வரின் இயற்கைபேரிடர் நிவாரணநிதிக்கு கடலூர் மாவட்ட ஆசியர் சிபி ஆதித்திய செந்தில்குமாரிடம் வழங்கினர். கூட்டமைப்பின் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், தலைவர் பாலுபச்சயப்பன், பொது செயலாளர் பி.வெங்கடேசன், இணை பொது செயலாளர் எஸ்.கே.தேவநாதன், பொருளாளர் பி.கே.வி.வெங்கட்ரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.