districts

img

கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர்

கடலூர், டிச.1- பெஞ்சல் புயலால் கடலூர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.  அதன்படி, சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறன்று வரை சூறைக்காற்றுடன் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. பொதுமக்கள் தங்கள் அத்தி யாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியே வர முடி யாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர். தனித்தீவு வெளுத்து வாங்கிய கனமழையால் கடலூர் புதுக்குப்பம், நேரு நகர், பெரியசாமி நகர், துரைசாமி நகர், அண்ணா நகர், ஜட்ஜ் பங்களா சாலை, திருப்பாதிரிப்புலியூர் தானம், பாண்டுரங்கன் நகர், கூத்தப்பாக்கம், பெரியகங்கணாங்குப்பம், உச்சி மேடு, நாணமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் தனித்தீவாக மாறிவிட்டது.  1000-க்கும் மேற்பட்ட வீடு களுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. மேலும் மாநகரில் திரும்பிய பக்கமெல்லாம் மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கடும் சிரமப்பட்ட னர் ரப்பர் படகில் மீட்பு கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை, கடற்கரை சாலை, வேணு கோபாலபுரம் சாலை, திரு வந்திபுரம் உள்ளிட்ட சாலைகளில் சுமார் 2 முதல் 3 அடி உயரத்திற்கு மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடு கிறது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், தாழ்வான இடங்களில் இருந்த 15-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதுபற்றி அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை யினர் இணைந்து, வீடுகளில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த 40-க்கும் மேற்பட்ட மக்களை ரப்பர் படகில் மீட்டு முகாமில் தங்க வைத்தனர். இந்த நிலையில், கடலூர் மாநகராட்சியில் குடியிருப்பு பகுதி யில் தேங்கி நிற்கும் மழை நீர் மோட்டார்கள் மூலம் வெளி யேற்றும் பணி நடக்கிறது. அதே போல் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரையும் போலீசார் மோட்டார் மூலம் வடிகாலில் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். இடை விடா மல் பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. வீடுகளை சூழ்ந்த மழைநீர் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பண்டரக்கோட்டை, சேமக்கோட்டை, அங்கு செட்டிப்பாளையம், தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். சிதம்பரத்தில்  சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் பல இடங்களில் வீடுகளையும் மழை நீர் சூழ்ந்து நிற்கிறது. அதேபோல் விருத்தாச்சலம், பண்ருட்டி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் என மாவட்டம் முழுவதும் கன மழை பெய்தது. கடலூரில் உள்ள தென்  பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதேபோல் கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு அணை தாண்டி வெள்ள நீர் கடலில் கலந்து வருகிறது.  கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை யின் காரணமாக பல்வேறு இடங்க ளில் வயல்கள் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது. விடுமுறை கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடு முறை கனமழை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக டிச. அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். 25 வீடுகள் சேதம்  இம்மாவட்டத்தில் பாதிக்கக்கூடிய பகுதிகளாக மொத்தம் 239 இடங்கள் அடை யாளப்படுத்தப்பட்டுள்ளது.  துணை ஆட்சியர் அல்லது உதவி இயக்குநர் நிலையில் 14 மண்ட லங்கள், 6 நகராட்சி, 14 பேரூ ராட்சி, ஒரு மாநகராட்சிக்கு என தனித்தனியே அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  14 நிவாரண முகாம்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 330 நபர்கள் பாதுக்காப்பாக தங்க வைக்கப்பட்டு, இதுவரை  1374 நபர்களுக்கு உணவு வழங்கப் பட்டது. கனமழையின் காரணமாக தற்பொழுது வரை 25 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரி வித்திருக்கிறார்.