கிருஷ்ணகிரி, ஜூன் 2-
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் அதிக நீர்வரத்து காரணமாக அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட நீரில் பனிக்கட்டிகளை போல ரசாயன நுரை மிதந்து செல்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 750 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலம் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதி களில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கெலவரப்பள்ளி அணையின் முழுக் கொள்ளளவான 44.28 அடிகளில் 41.66 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வியாழக்கிழமை நீர்வரத்து விநாடிக்கு 519 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விநாடிக்கு 750 கனஅடியாக உள்ளது. மேலும் அணை யில் இருந்து 640 கனஅடிநீர் வெளி யேற்றப்படுவதால், ஆற்றில் அதிகப்படி யான ரசாயன நுரை பனிக்கட்டிகளை போல மிதந்து செல்கிறது.