சென்னை, செப்.13- சென்னை குடிநீர் வாரி யம் சார்பில் குறைதீர் கூட்டம், மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப் பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத் திற்கான குறைதீர் கூட்டம், சனிக்கிழமை (செப்.14) காலை 10 மணி முதல் மதி யம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடை பெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை கள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம் என அலுவலகக்குறிப்பு தெரிவித்துள்ளது.