விழுப்புரம், மார்ச் 13- விழுப்புரம் செவலபுரையில் அரசு புறம்போக்கு இடத்தில் 2 தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி திங்கட்கிழமை மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட செவலபுரையில் அரசு புறம்போக்கு இடத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த குடியிருப்பை நீதிமன்ற உத்தரவை காட்டி இடித்து 6 மாதங்கள் ஆகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. அரசு அளித்த உறுதிமொழி உத்தரவு படி மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும், கடந்த ஆறு மாதங்களாக அலட்சியம் காட்டிய அதிகாரிகளை கண்டித்தும் பொது மக்கள் குடும்பத்துடன் திங்கட் கிழமை மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் கட்சியின் தலைமையில் காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்கட்சியின் வட்டச் செயலாளர் டி.முருகன் தலைமை யில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், செவலபுரை கிராமத்தில் குளத்துமேடு அரசு புறம்போக்கில் 2 தலைமுறையாக சுமார் 93 குடும்பத்தினர் வீடு கட்டி நிரந்தரமாக குடியிருந்து வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை காட்டி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இடிக்க வந்த அதி காரிகளை மாவட்ட சிபிஎம் கட்சி தடுத்து நிறுத்தி, பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு மாற்று இட கொடுத்து விட்டு இடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டோம், அதனால் அன்று வீடு களை இடிக்காமல் திரும்பி சென்ற வர்கள், கடந்த ஜூலை,25ந்தேதி மீண்டும் காலை சுமார் 7 மணிக்கு நீதிமன்ற உத்தரவை காட்டி மீண்டும் அந்த வீடுகளை இடிக்க வந்தனர், அப்போது அங்கு திரண்ட சிபிஎம் கட்சி யினர் மீண்டும் பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு இடிக்க வலியுறுத்தி வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்தினர், இதையொட்டி திண்டிவனம் சார் ஆட்சியராக இருந்த அமித், செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அங்கு வந்து போராட்டக்களத்தில் இருந்த மார்க்சிஸ்ட்கட்சியினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர், அப்போது இங்கு வீடு கட்டி குடியிருந்து வீடு இடிப்பில் பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்து எழுதி கொடுத்து விட்டு தான் அந்த வீடுகளை இடித்தனர், நாங்க ளும் நீதிமன்ற உத்தரவை மதித்து, போராட்டத்தை கைவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்குவார்கள் என காத்தி ருந்தோம். வாழ்ந்த வீட்டை பறி கொடுத்தவர்கள் கடந்த ஆறு மாதங்களாக பள்ளி உள்ளிட்ட அரசு கட்டிடங்களில் தங்கி இருந்து வருகின்றனர், ஆனால் இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை, இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள அரசு கட்டிடங்களை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் அச்சுறுத்தி வருகின்றனர். உடனடியாக பேச்சுவார்த்தை உறுதிமொழி படி மாற்று இடம் வழங்க வேண்டும் என்றார் ராமமூர்த்தி. போராட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணி யன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வீ.ராதாகிருஷ்ணன், மூத்த உறுப்பினர் ஏ.உதயகுமார், வட்ட குழு உறுப்பினர்கள் கே.ரவி, பி.வெங்கடபதி, எஸ்.கே.எஸ்.ஹரிஹர குமார், சி.குமார், என்.கார்த்திகேயன்,என்.சுப்பிரமணியன், ஆர்.அண்ணாமலை,கிளை செய லாளர் கே.துரைசாமி உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். மேல்மலையனூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் 72 குடும்பங்க ளுக்கு மாற்றுஇடம் வழங்க உறுதி அளித்த நிலையில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.