districts

img

விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் உதவி இயக்குநர்

திருவண்ணாமலை, ஜன.3- திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்து வருபவர் கோவிந்தராஜன். இவர், அலுவலகத்துக்கு வரும் விவசாயிகளை அவமரியாதையாக நடத்துகிறார். விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் எதையும் தெரிவிப்பதில்லை. வெளிப்படைத் தன்மை இன்றி முறைகேட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  இதனால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை யடுத்து, திருவண்ணாமலை இணை இயக்கு நர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. துவக்கத்திலேயே  இந்த கூட்டத்தில் இருந்து வெளியேறிய கோவிந்தராஜன் சங்கத்தின் மாவட்டச் செயலாளரை செருப்பால் அடிப்பேன் என்றும் திட்டினார். இதையடுத்து, வேளாண்மை அலு வலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் காத்தி ருப்புப் போராட்டமாக மாறியது. போராட்ட களத்திற்கு வந்த வேளாண்மைத் துறையின் இணை இயக்குநர் கண்ணகி, பெரணமல்லூர் உதவி இயக்குநர் (வேளாண்மை) ஆகி யோர் கோவிந்தராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சென்னை வேளாண்மை ஆணையருக்கு கடிதம் எழுதுவதாக உத்தரவாதம் அளித்தார். அதன் அடிப்படையில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் கடந்தும் இன்று வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இத னால், மீண்டும் விவசாயிகளை அவமரியாதையாக நடத்துவது தொடர்கிறது.  அண்மையில் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ், உளுந்து, துவரைக்கும் செலுத்திய தொகை ரூ.500 க்கு ரசீது கேட்டுள்ளார். இதற்கு தகாத வார்த்தை களால் ஏசி அவரை அடிக்கச் சென்றுள்ளார். அதேபோல், சோழவரம் விவ சாயி பெருமாள், மோசவாடி விவசாயி ராஜேந்திரன், நகரந்தல் விவசாயி வாசு உள்ளிட்டோருக்கு தரமற்ற விதை நெல் கொடுத்துள்ளார். இதனால் பெருத்த நட்டத்தை சந்தித்தனர் அந்த விவசாயிகள்.  இதை வெளிப்படுத்திய பத்திரிகை செய்தி யாளரையும் இழிவுபடுத்தி தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருகிறார். எனவே பெரணமல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தராஜன் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பெரண மல்லூர் வேளாண்மை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் பெருமாள் தலை மையில் தொடங்கிய போராட்டத்தில் ஒன்றியச் செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் டி.கே. வெங்கடேசன், மாவட்டப் பொரு ளாளர் உதயக்குமார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.செல்வன், பெரணமல்லூர் வட்டார செயலாளர் பெரணமல்லூர் சேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.