நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதிய பாக்கித் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் காட்பாடி ஆக்சிலியம் கல்லூரி ரவுண்டானா அருகில் கே.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.கோவிந்தராஜ், கே.ஜே. சீனிவாசன், எஸ்டி சங்கரி, கோபால.ராசேந்திரன், குருமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர்.