districts

தொழில் பயிற்சி முகாம்

விழுப்புரம், ஏப்.13- தேசிய தொழில் பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழில் பழகுநராக சேர்ந்திட மாவட்ட அளவிலான தொழில் பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், திண்டிவனம் தொழிற்பயிற்சி நிலைய வளா கத்தில் வரும் 21ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நடை பெற உள்ளது. இந்த முகாமில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,மற்றும் ஆவின்  போன்ற அரசு பொதுத்துறை நிறு வனங்கள், சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர். என்சிவிடி, மற்றும் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்சாக சேர்ந்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சி யும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற லாம். இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.8500 முதல் ரூ.10,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.