விழுப்புரம், ஏப்.18- விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் துரை. ரவிக்குமாருக்கு வாக்கு கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் , கண்டாச்சிபுரம் வட்டம், தேவனூர் வெல்லமுத்தூர் நாயனூர், வீரபாண்டி, வீரங்கிபுரம், கண்டாச்சி புரம், காடகனூர் வசந்த கிருஷ்ணாபுரம், திருமலை பட்டு, ஆதிச்சனூர் ஆகிய கிராமங்களில் விவசாயி தொழிலாளர் சங்கம் நிர்வாகிகள் வீடு,வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தலைவர் வி.அர்ச்சுனன், வட்ட செயலாளர் ஏழுமலை,வட்ட பொருளாளர் பாபு, வட்ட துணை செயலாளர் செங் கேணி, வட்டக்குழ உறுப்பி னர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.