districts

img

கணினி மூலம் பொதுத்தேர்வு எழுதும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர் பள்ளிக் கல்வித்துறை அனுமதி

அம்பத்தூர்,பிப்.16- பார்வைத்திறன் குறைபாடுடைய அரசு பள்ளி மாணவர் கணினி மூலம் பொதுத் தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை அடுத்த பூந்த மல்லியில் பார்வைத்திறன் குறைபாடு உள்ளோ ருக்கான அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறைபாடுடைய மாண வர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர்.  இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 18 மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், வழக்கமாக இங்கு தேர்வு எழுதும் பார்வைத்திறன் குறை பாடுடைய மாணவர்களுக்கு அவர்கள் சொல்ல சொல்ல மற்றொருவர் தேர்வு எழுதுவது வழக்கம்.  தற்போது வரை தமிழ கத்தில் இப்படித்தான் பார்வை குறைபாடு உடைய மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு படித்து வரும்  ஆனந்த் என்ற மாணவர் கணினி மூலம் தேர்வு எழுதுவதற்கு பயிற்சிப் பெற்றார். இது தொடர்பாக அவர் கணினி மூலம் தேர்வு எழுத அனுமதி கேட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து துறை அதி காரிகள் பள்ளிக்கு வருகை தந்து அவரை சந்தித்து மாதிரி தேர்வை நடத்தி, அதில் திருப்தி அடைந்த பிறகு மாணவர் ஆனந்துக்கு அனுமதி வழங்கியுள்ளனர். தமிழகத்திலேயே கணினி மூலம் தேர்வு எழுதும் பார்வைத்திறன் குறைபாடுடைய முதல் மாணவன் என்ற பெருமையை ஆனந்த் பெற்றுள்ளார். இதற்காக இவர் 2 ஆண்டுகள் கடினமாக பயிற்சி பெற்று தட்டச்சுப் பயிற்சிக்கு சென்றுள்ளார். பல்வேறு கட்ட பயிற்சிகள் நடத்தப்பட்ட பின்பு, இவர் கணினி மூலம் தேர்வு எழுத உள்ளார். அதற்காக பிரத்தியேகமாக கணினியில் சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கணினி மூலம் தேர்வு எழுத உள்ளார்.  அதன் படி, வினாத்தாள்களை ஒருவர் படிக்க, மாணவர் ஆனந்த் கணினி மூலமாக விடைகளை பதிவு செய்வார். அது தேர்வுத்தாளில்  பிரிண்ட் எடுக்கப்பட்டு மற்ற தேர்வுத்தாள்களுடன் அனுப்பப்படும். இதன் வாயிலாக மாநில பாடத்திட்டத்தில் படித்து கணினி வழியில் தேர்வெழுதும் முதல் மாணவராக ஆனந்த் உள்ளார். வழக்கமாக ஒரு மாணவருக்கு 3 மணி நேரம் தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படும் நிலையில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாணவர் ஆனந்த் கூறுகையில்,  தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக கணினியில் சுயமாக தேர்வு எழுதுவது வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு உதவிய தமிழக முதல்வர், துணை முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற முயற்சியும் பயிற்சியும் மற்ற மாணவர்களும் கிடைக்கவேண்டுகிறேன் என்றார்.