districts

img

குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல்!

சென்னை,அக்.3- சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகளை அதிகளவு வைரஸ் காய்ச்சல் பாதிக்கிறது என கூறப்படுகிறது. பருவமழைக்கு முன்பு  வடிகால்களை சீர் செய்ய வும், தாழ்வான பகுதிகளை  தீவிரமாகவும் கண்காணிக் கவும்  ஒரு உயிரிழப்பு கூட  ஏற்பட கூடாது என அதிகாரி களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதற்கிடையே பருவமழையால் நோய் பாதிப்பு ஏற்படாமலும் பார்த்து கொள்ளும்படி சுகாதார துறை அதிகாரி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த நிலையில் விரை வில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை யில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த காய்ச்சல் பெரிதளவில் பாதிப்பதாக கூறப்படுகிறது. தற்போது மழைக்காலம் தொடங்க உள்ளது. இதன்  காரணமாக மாறுபட்ட சீதோஷ்ண நிலை ஏற்பட் டுள்ளது. இதனால் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் குழந்தைகள் உள்பட வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு தொடர் இருமல், நுரையீரல் சுவாசப் பிரச்சினை, வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படுகின்றன. தமிழகத்தில்  சென்னையில் அதிகளவு வைரஸ் காய்ச்சல் பரவி வரு கிறது. ரைவஸ் காய்ச்சல் பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளையம் பாதிப் படைய செய்கிறது. இதனால் அரசு மருத்துவ மனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வரு கிறது. 80 விழுக்காடு படுக்கை கள் மருத்துமவனைகளில் நிரம்பி விட்டதாக கூறப்படு கிறது. வைரஸ் காய்ச்ச லில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு சுடு தண்ணீரை பயன்படுத்தும் படி சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில வழிகாட்டுதல் களையும் வெளியிட் டுள்ளது. அவற்றை பின்பற்றி னால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருக்காது என கூறப்படுகிறது. கைகளை சுத்தமாக வைப்பது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருந்தாலே வைரஸ் காய்ச்சலை தடுத்துவிட முடியும் என கூறப்படுகிறது.