districts

img

சென்னையில் அதிகரித்து வரும் வைரஸ் காய்ச்சல்

சென்னை,நவ.14- தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. பருவகால மாற்றத்தால் தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தற்போது பரவி வருகிறது.  சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெங்கு பாதிப்பு ஏற்படு வதை தடுக்க மாநகராட்சி சார்பில் தேவையில்லா இடங்களில் தண்ணீர் தேங்குதல், கண்ட இடங்களில் குப்பை கொட்டுதல் போன்றவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலை யில், சென்னையிலும் தற்போது வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து  வருகிறது.  நாளுக்கு நாள் சென்னை யில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு புற நோயாளிகளிகள் சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் உள்நோயா ளியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில், உள்நோயாளிகளாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்து வமனையில் 28 பேர் காய்ச்சலாலும், ஒருவர் டெங்குவாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 56  பேர் காய்ச்சலாலும், 5 பேர் டெங்கு வாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அதிகரிக்கும் நோயாளிகள்  ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் 14 பேர் காய்ச்சலுக்கும், 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் உள்நோயாளி யாக யாரும் சிகிச்சை பெறவில்லை. அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் அனைவரும் சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரு வதாகவும், ‘இன்புளூயன்ஸா’ வைரஸ் காய்ச்சலால் யாரும் பாதிக்கப்பட வில்லை எனவும் மருத்துவர்கள் தெரி வித்தனர்.