districts

img

கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் ஒன்றிய பாஜக!

மாநில உரிமைகளை பறித்து, கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சியினர் பெரும் திரளாக பங்கேற்றனர். வேலூர் சத்துவாச்சாரி ஆர்டிஓ சாலையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ். தயாநிதி தலைமையில் நடைபெற்றது. திமுக மாவட்ட அவைத்தலைவர்   தி.அ.முகமது சகி, திமுக மாநகர செயலாளரும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,  காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் விசிக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஜி.லதா, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜி.கோபி சிபிஐ(எம்எல்) மாவட்டச் செயலாளர் எம். சரோஜா, திராவிடர் கழகம் சிவக்குமார்,  சையத் நவாஸ் (முஸ்லிம் முன்னேற்ற கழகம்) சபீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ), இக்பால் (திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழகம்) சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர்

கடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். மாநகர மற்றும் ஒன்றிய செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இள.புகழேந்தி, மாநகர செயலாளர்  கே.எஸ்.ராஜா, அவைத் தலைவர் பழனிவேல், மதிமுக மாவட்ட செயலாளர் என். ராமலிங்கம், திமுக அவைத் தலைவர் பழனிவேல், விடு தலை சிறுத்தை கட்சியின் துணை மேயர் தாமரைச் செல்வன், மாநகர செயலாளர் செந்தில், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ.எஸ். சந்திரசேகர், மாவட்டத் தலைவர் திலகர் தமிழக வாழ்வு கட்சியின் அருள் பாபு,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணை செயலாளர் வி.குளோப்,  திராவிட கழகத்தின் எழிலேந்தி, தமுமுக மாவட்டச் செய லாளர் ரஹீம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி. ஆறுமுகம், வி. உதயகுமார், எம்.மருதவாணன், பி. கருப்பையன், வி.சுப்ப ராயன், ஆர். ராமச்சந்திரன், எஸ்.திரு அரசு, என்.எஸ். அசோகன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், பி.தேன்மொழி, ஜெ.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை வேம்புலி அம்மன் கோவில் அருகில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி. ரகுபதி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக நகர செயலாளர் பூங்காவனம், நகர அவைத்தலைவர் தாமோதரன், வையாபுரி, விசிக மாவட்டச் செயலாளர் சீம. ரமேஷ் கர்ணா, மண்டல துணைச் செயலாளர் சோ. தமிழ், ராணிப்பேட்டை தொகுதி செயலாளர் மாந்தாங்கல் ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மலக் முகமது காலித், ஆற்காடு நகர செயலாளர் முன்னா, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்டத் தலைவர் மஸ்தான், மதிமுக பால் சத்யா, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சந்திரன், எல்.சி. மணி, எஸ். கிட்டு, ஆர். மணிகண்டன், எஸ். செல்வம், தா. வெங்கடேசன், ஏபிஎம். சீனி வாசன், ஆர். வெங்கடேசன், எ. ரமேஷ், ஆ.தவராஜ், சேகர், வேட்டைக்காரன் சங்கம் சேட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் எம். பிரபலநாதன் தலைமை தாங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், திமுக மாநில மருத்துவர் அணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன், மதிமுக மாவட்டச் செயலாளர் சீனி. கார்த்திகேயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இரா. தங்கராஜ், திமுக நகர செயலாளர் ப. கார்த்தி வேல்மாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ். எம். நவாப்ஜான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கலிமுல்லா, சிபிஎம் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ப. செல்வன், கே. வாசுகி, இரா. பாரி, எஸ். ராமதாஸ், என். சேகரன், ஏ. லட்சுமணன் மற்றும் அனைத்து கட்சி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு தலைமை தாங்கினார். திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், காங்கிரஸ் தலைவர் நடராஜன், திமுக செயலாளர் பாலமுரளி, விசிக செயலாளர் மாதேஷ்,கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், திராவிடர் கழக செயலாளர் மாணிக்கம்,மனிதநேய மக்கள் கட்சி முகமது உமர், சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் இருதயராஜ்,மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் உரை யாற்றினர். ஓசூர் மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகரச் செயலாளர் சிபி. ஜெயராமன், ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.  திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, சிபிஎம் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், கோவிந்தசாமி, காங்கிரஸ் தலைவர் முரளி தரன், திமுக மாநகர செயலாளர் மேயர் எஸ்.ஏ. சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாதையன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் வனவேந்தன், மதிமுக செயலாளர் பால முரளி.விசிக செயலாளர் செந்தமிழ், மனித நேய மக்கள் கட்சி செயலாளர் அப்துல் ஷெரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலை அரு கில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர் தலைமை வகித்தார். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தா. உதயசூரியன் எம்எல்ஏ, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கண்ணி, மதிமுக மாவட்டச் செய லாளர் கா.ஜெய்சங்கர், விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் கே. அறிவுக்கரசு, வடக்கு செயலாளர் வேல். பழனியம்மாள், தெற்கு இரா.மதியழகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் டி.ஜெ.ஜெய்கணேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் டி.ராஷித் கான், சிபிஎம் மாவட்ட செயற்குழு ஜி.ஆனந்தன்,டி. ஏழுமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். விழுப்புரம் நகர திமுக செயலாளர் ரா.சக்கரை முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, சட்ட மன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, லட்சுமணன், திமுக மாவட்டப் பொருளாளர் ஆர்.ஜனக ராஜ், மதிமுக மாவட்டச் செயலாளர் பாபு கோவிந்தராஜ், திமுக முன்னாள் எம்எல்ஏக்கள் செ.புஸ்பராஜ்,சேதுநாதன், செந்தமிழ்ச் செல்வன், விழுப்புரம் நகராட்சி தலைவர் தமிழ்செல்வி, சிபிஐ மாவட்ட செய லாளர் ஆர்.சௌரிராஜன், விடுதலை சிறுத்தை கள் கட்சி மாவட்டச் செயலாளர் ரா.பெரியார், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் அமீர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஜாமியாளம் ராவுத்தர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.குமரன், மாநில தொழிற்சங்க தலைவர் பன்னீர்செல்வம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.கீதா, எஸ். முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், எஸ் .வேல்மாறன், சே.அறிவழகன், ஆர்.டி.முருகன் உட்பட பலர் உரையாற்றினர்.