விழுப்புரம், பிப்.4- ஏழை-எளிய மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பிப்.4 அன்று ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வட மாவட்டங்கள் முழுவதும் ஏராளமான மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் கடலூரில் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிகருப்பையன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.கே. சரவணன், எஸ்.கே. பக்கிரான், டி.பழனிவேல் பி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.பி. தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு கண்டன உரையாற்றினார். சிதம்பரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு நகர செயலாளர் எஸ்.ராஜா தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ப.வாஞ்சிநாதன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா, மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி கலந்து கொண்டார். வட்டார செயலாளர் பி. கணபதி தலைமை வகித்தார். போளூர் பேருந்து நிலையம் அருகில் இரா.இரவி தாசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ப. செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையில் மாநிலக்குழு உறுப்பினர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டராம்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ் கலந்து கொண்டார். , வந்தவாசி தேரடி அருகில் வட்டச் செயலாளர் அப்துல் காதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலச் பொது செய லாளர் இரா.சரவணன், கரும்பு விவசாய சங்க மாநில நிர்வாகி பெ.அரிதாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் வட்டச் செயலாளர் எஸ்.பாலமுருகன் தலைமையில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.அர்ச்சுணன், எம்.கே.முருகன், தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மயிலம் ஒன்றியம் சார்பில் கூட்டேரிப்பட்டில் செயலாளர் கெஜமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நகரச் செயலாளர் பி.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பினர். கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ரயில் நிலையம் முன்பு மாநகர செயலாளர் நாகேஷ் பாபு, ஒன்றிய செயலாளர் தேவராஜ் ஆகி யோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கெலமங்கலம்,தளி ஒன்றிய குழுக்கள் சார்பாக தேன்கனிக் கோட்டையில் நடந்த ஆர்ப்பா ட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர்கள் நடராஜன், ராஜா ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் சாமி நடராஜன் கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி. ஜெயராமன்.சி.பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சூளகிரி வட்டக் குழு சார்பில் செயலாளர் முருகன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சி.சுரேஷ், ஊத்தங்கரையில் வட்டச் செயலாளர் சபாபதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன் கண்டன உரையாற்றினார். வேலூர் வேலூர் மாவட்டத்தில் 7 இடைக்கமிட்டிகள் 5 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் வடக்கு கமிட்டி சார்பில் சத்துவாச்சாரியில் செயலாளர் கே.பாண்டுரங்கன் தலைமையிலும், வேலூர் தெற்கு கமிட்டி சார்பில் ஓட்டேரி பேருந்து நிறுத்தத்தில் எஸ்.செல்வி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காட்பாடி கமிட்டி சார்பில் சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் ஆர்.சுடரொளியன் தலைமையிலும், திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையிலும், குடியாத்தம் நகரம், தாலுக்கா மற்றும் பேர்ணாம்பட்டு கமிட்டிகள் இணைந்து குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் எஸ்.சிலம்பரசன், சி.சரவணன், வி.குபேந்திரன் ஆகியோர் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, எஸ்.தயாநிதி, ஏ.நாராயணன், கே.சாமிநாதன், செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், பி.காத்தவராயன், எஸ்.ஜோதி, பி.குணசேகரன், எம்.கணேஷ்,செம்மலர் மற்றும் இடை கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சித் தோழர்கள் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு தாலுகா குழு சார்பில் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வாலாஜா தாலுகா குழு செயலாளர் ஆர். மணிகண்டன் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் பி. ரகுபதி கண்டன உரை யாற்றினார். செயற்குழு உறுப்பினர் தா. வெங்கடேசன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கம் எழுப்பினர். ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் தாலுகா குழு செயலாளர் ஜி. மதியழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.வெங்கடேசன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். அரக்கோணம் பழனி பேட்டையில் தாலுகா செயலாளர் ஆர். வெங்கடே சன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். காசிநாதன் மற்றும் பலர் உரையாற்றினர்.