districts

img

பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து வடமாவட்டங்களில் ஆவேச மறியல் !

சென்னை, ஆக 1- தமிழ்நாடு  அரசு கோரிய நிதியை வழங்காத ஒன்றிய அரசின் பட்ஜெட்டை  கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலங்கள் முன்பு வியாழனன்று (ஆக,1)  ஆவேச மறியல் போராட்டங் கள் நடைபெற்றன. வட மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  மத்தியசென்னை  மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன்  முன்பு நடைபெற்ற மறியலில் சிபிஎம்  மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பி னர் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

வடசென்னை

பெரம்பூர் ரயில் நிலையம் அருகே  சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், வி.ஜானகிராமன்,  கே.எஸ்.கார்த்தீஷ் குமார், அ.விஜயகுமார், மா.பூபாலன், எல்.பி.சரவண தமிழன், எம்.எஸ்.மூர்த்தி (சிபிஐ), திருநாவுக்கரசு, சிபிஐ(எம்.எல்) லிபரேஷன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாவட்டச் செயலாளர் கு.வேம்புலி வெங்கடேசன் ஆகியோர் தலைமை யில் மறியல் நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ஆர்.ஜெயராமன், ஆர்.லோக நாதன், எஸ்.பாக்கியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு 

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு மதுராந்தகம் திருப் போரூர் ஆகிய மூன்று மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் செல்வ சிங், சிபிஐ மாவட்டச் செயலர் ராஜ்குமார், சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் இரணியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் தலைமை தாங்கினார். நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூதனன், மாநகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் உட்பட 100 பேர் கைதாகினர். திருவள்ளூர் திருவள்ளூரில் ஸ்டேட் வங்கி  முன்பு வியாழனன்று (ஆக 1) மறியல் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், சிபிஐ (எம்.எல்) மாவட்ட செயலாளர் எம்.அன்பு ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. பொன்னேரியில் தபால் நிலையம் முன்பு வியாழனன்று (ஆக 1) மறியல் நடைபெற்றது. இதற்கு சிபிஎம் மாநில குழு உறுப்பினர் கே.ஆறுமுக நயினார், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அருள், சிபிஐ (எம்.எல்) மாவட்ட நிர்வாகி ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் தாங்கினர்.   திருத்தணியில் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிபிஎம் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ப.சுந்தரராசன், சிபிஐ ஆர்.கே.பேட்டை வட்டச் செயலாளர் ஆர்.ஜிஆர்.ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.