ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு திங்களன்று மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஆர்.கலியமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.டி.முருகன், மாவட்ட தலைவர் ஆர்.தாண்டவராயன், மாவட்ட தலைவர் எம்.ஐ.சகாபுதீன், பி.பாலசுப்ரமணியம், விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாநில குழு அம்பேத்கர் உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.