விழுப்புரம், நவ.13- விழுப்புரம் அருகே பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றி யத்துக்கு உட்பட்ட பானாம்பட்டு ஊராட்சியில் வேளாண்மைத்துறை சார்பில் மின்னணு முறை யில் பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் சென்று பார்வையிட்டு பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் முறை குறித்த விவரங்க ளை கேட்டறிந்து, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் பருவ மழையின் போது பயிர்கள் பாதிக்கப்பட்டதால், அதனை முறையாக கணக்கெடுக்கும் வகை யில் விழுப்புரம் மாவ ட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் தற்போது மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்பொறியியல் துறை உள்ளிட்ட துறை களை சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த பணியை குறித்த காலத்தில் முறையாக செய்து முடிக்க வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறக்கூடாது என அதிகாரிகளிடம் தெரி வித்தார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சீனி வாசன், கோலியனூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பிரேமலதா, வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர். வெங்கடேசன், மின் மாவட்ட மேலாளர் பிரவீனா, விழுப்புரம் தாசில்தார் கனிமொழி மற்றும் வேளாண்மைத்துறை அதி காரிகள், விவசாயிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.