districts

img

விழுப்புரம் புத்தகத் திருவிழா உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார்

விழுப்புரம் நகராட்சி திடலில், மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்து,  விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் எழுதிய புத்தகத்தை வெளியிட சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.லட்சுமணன், ச.சிவக்குமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.