districts

    விழுப்புரம் 200 கிலோ குட்கா பறிமுதல்

விழுப்புரம், ஜூலை.14-

    விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பா ளருக்கு விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பேரில் விக்கிர வாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன், பெரிய தச்சூர்  உதவி ஆய்வாளர் மருது தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நாரேரி குப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 46). வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதை யடுத்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.