districts

img

அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, பிப்.6- திருவண்ணாமலை அடுத்த பெரிய கல்லப்பாடி கிராம ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தியும், ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் மூன்று வார கூலி பாக்கியை உடனே வழங்க கேட்டும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே ஒன்றிய செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரிய கல்லப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் பக்க கால்வாய் தூர்வாரி வேண்டும்,  ஜல்ஜீவன் மிஷன் திட்ட குடிநீர் அருந்ததியர் காலனி பகுதிக்கு சரி வர வழங்க வேண்டும், கோவிந்த ராஜபுரத்துக்கு கழிவுநீர் பக்க கால்வாய் கட்டி கொடுக்க வேண்டும், குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர் டி.கே.வெங்கடேசன், விவசாயிகள் சங்கத் மாவட்ட செயலாளர் அ.உதயகுமார், பொரு ளாளர் அருண்குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் எம்.சக்கர வர்த்தி, மேரி, செல்வம், இளங் கோவன், கோதண்டம், சின்னப் பையன், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.