விழுப்புரம்,ஆக.29- விழுப்புரம் மாவட்டம்,வானூர் வட்டத்திற்கு உட்பட்ட திருவக்கரை, தொள்ள மூர், எறையூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்தக் கல்குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் பாறைகளை பெரிய பெரிய இயந்திரங்கள் மூலம் உடைத்து ஜல்லி மற்றும் எம். சாண்ட் கட்டுமானம், சாலை அமைக்கும் பணிக்காக உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்த கல் குவாரிகள் அரசு விதிமுறை களை முறையாக பின்பற்றுவதில்லை. கனிம வளத்துறை அனுமதித்த அளவைக் காட்டி லும் பல மடங்கு ஆழத்திற்கு கருங்கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர். இதனால், விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், வானூர் வட்டம், பெரும் பாக்கம் கிராமத்தில் செயல்படும் தனியார் கல்குவாரியில் அளவுக்கு அதிகமாகவும், கூடுதல் ஆழத்தில் கருங்கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக கூறி, இந்த கல் குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தி இந்த கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். தலைவரை தாக்கிய முயற்சி போராட்டத்தில் பங்கேற்ற பெரும் பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாங் கத்தை கல்குவாரி பணியாளர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவ லறிந்த மயிலம் காவல் நிலைய போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குவாரியை பார்வை யிட்டனர். பின்னர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக் கொண்டனர்.