districts

img

பூங்குணம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு

கடலூர்,ஜன.24-  பூங்குணம் ஊராட்சியை பண்ருட்டி நகரா ட்சியுடன்  இணைப்பதற்கு கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தங்களிடம் கருத்து கேட்பு  கூட்டம் நடத்தவேண்டும் என்றும் இணைக்கும் யோசனையை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம்  பூங்குணம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதால் மக்களின் வாழ்வாதாரமான 100 நாள் வேலை திட்டம், கலைஞரின் கனவு இல்ல வீடு, பாரத பிரதமர் வீடு, அரசு நலத் திட்டங்கள் பறிபோகும். வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீதான கூடுதல் வரி விதிப்பு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ப தால் மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சிபிஎம் கிளைச் செயலாளர் ராஜேந்தி ரன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. பூங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த தங்க ராசு, மோகன், கங்காதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன், வட்டச்  செயலாளர் எஸ்.கே.ஏழுமலை, மாவட்டக்  குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன், வினோத் குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் பாலசுப்ரமணியன், முன்னாள் துணைத் தலைவர் ராமு உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.