ராணிப்பேட்டை, மே 30 - ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதி வாலாஜா தாலுகா லாலாபேட்டை கிராம எல்லை மறுவரை குறித்து முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கள ஆய்வுக்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளரும் சமூக ஆர்வலருமான எல்.சி.மணிக்கு அனுமதி மறுத்ததுடன், ஊராட்சிமன்றத் தலைவர் ஏ.கே.முருகன் தூண்டுதலின் பேரில் அவரது அடியாட்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலி யுறுத்தி லாலாபேட்டை கிராம மக்கள், வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் டி.சந்திரன், பி.ரகுபதி, என்.ரமேஷ், தாலுகா செயலாளர் ஆர்.மணிகண்டன், 10 ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர். நல்வினை விஸ்வராஜ் மாநில துணை பொதுச் செயலாளர் வி.தர்மேந்திரன் ஆகி யோர் பேசினர். லாலாபேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கோகுலன், கோடீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.