districts

img

விக்கிரவாண்டி: ஏரியில் மூழ்கி  கணவன்-மனைவி பலி

விழுப்புரம்,டிச.2- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி  வட்டத்திற்குட்பட்டது தொரவி கிராமம். இங்கு காமன் கோவில் தெருவை சேர்ந்த கோவில் பூசாரி கண்ணன் (42), தனது மனைவி பிரேமாவுடன் வீட்டி லிருந்து வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.  இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று(டிச.2) தொரவி ஏரி நீரில் 2 உடல்கள் மிதப்பதாக விக்கிரவாண்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்று காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டனர். பிறகு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த கண்ணனுக்கு பிரதிக்க்ஷா (8) என்ற மகள் உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

;