சென்னை, செப். 3 - விலைவாசி உயர்வு, வேலை யின்மைக்கு எதிராக செப்.7 அன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறியல் போராட்டத்தை நடத்துகிறது. இதனை விளக்கி மத்தியசென்னை மாவட்டத்தில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக செப்.1 அன்று 6 மையங்களில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. எழும்பூர் பகுதியில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், வில்லிவாக்கம் பகுதியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், அண்ணாநகர் பகுதியில் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். பிரச்சார நடைபயணம் இதனைத்தொடர்ந்து ஞாயிறன்று (செப்.3) 16 மையங்களில் பிரச்சார நடை பயணம் நடைபெற்றது. ஆயிரம் விளக்கு பகுதி, கோடம்பாக்கம் மார்க்கெட்டில் பிரச்சார நடை பயணத்தை கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். எழும்பூரில் எழுத்தாளர் கவின்மலர், அண்ணாநகரில் திரைப்பட இயக்குநர் கவிதாபாரதி, ஆயிரம் விளக்கு பகுதியில் பேரா.சுந்தரவள்ளி, துறைமுகம் பகுதியில் ஊடகவியலாளர் ஆசிப், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதியில் பத்திரிகையாளர் பாரதி தம்பி, வில்லிவாக்கம் பகுதியில் எழுத்தாளர் கரண் கார்க்கி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த இயக்கங்களில் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன், கே.முருகன், வி.தன லட்சுமி, வே.ஆறுமுகம், எஸ்.சிவசுப்பிர மணியம், பகுதிச் செயலாளர்கள் வெ.இரவீந்திர பாரதி (ஆயிரம் விளக்கு), மகேந்திரவர்மன் (அண்ணா நகர்), கவிதா கஜேந்திரன் (சேப்பாக்கம் திருவல்லிக்கேணி), ஜலால் (துறைமுகம்), அன்பழ கன் (வில்லிவாக்கம்) மற்றும் ஆ. பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.