districts

img

வில்லியனூரில் முற்றுகை போராட்டம் வெற்றி !

புதுச்சேரி, செப். 24- வம்புபட்டு கிராமத்தில் வேலை உறுதி திட்ட புறக்கணிப்பை கண்டித்து வி.தொ.ச சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம்  கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை திட்டம் அமல்படுத்தப்பட்டு வரு கிறது. திருபுவனை சட்டமன்ற தொகுதி உட்பட்ட மண்ணாடிப்பட்டு கொம்யூன், வம்புபட்டு கிராமத்தில் கடந்த 5 ஆண்டு களாக வேலை நடைபெற வில்லை.  எனவே, வம்புபட்டு கிராமத்தில் 100 நாள் வேலையை துவக்கக் கோரி அகில இந்திய விவ சாய தொழிலாளர்  சங்கம் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மண்ணாடிப்பட்டு கொம் யூன் செயலாளர் விநாய கம் தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநிலச் செய லாளர் தமிழ்ச் செல்வன் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார். சங்க பொருளாளர் தட்சணா மூர்த்தி, நிர்வாகிகள் சிவ சங்கரி, சிவம் உள்ளிட்ட திரளான விவசாய தொழி லாளர்கள் இப் போராட்ட த்தில் பங்கேற்றனர். அதிகாரி உறுதி இந்த போராட்டத்தின் போது வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை சந்திக்க சென்றனர். ஆனால், அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லை. இதையடுத்து,  அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, வட்டார வளர்ச்சி கூடுதல் பொறுப்பு அதிகாரி  கார்த்திகேசனிடம் கோரிக்கை மனு வழங்கி னார். மனுவை பெற்று கொண்ட அதிகாரி, இன்னும் 20 நாட்களில்  உரிய எடுப்பதாக சங்க தலை வர்களிடம் உறுதி அளித்தார். அதிகாரியின் உறுதியை ஏற்று போராட் டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர்.