கள்ளக்குறிச்சி, அக்.21- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரேஷ் அகமது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலையரசன், ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை வாரி யாக அரசின் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி செல்லும் வகையில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். வருவாய்த்துறையில் மனுக்களை நிராகரிக்காமல் அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார். மாவட்டத்தில் சாலை விபத்து களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் துரிதமாக முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். மகளிர் சுய உதவிக் குழு திட்டத்தில் மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ஒரு சில துறைகளில் மட்டும் பணிகளில் தொய்வுகள் உள்ளன. இதை தீர்ப்பதற்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்று அதிகாரிக ளுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆவதால் அமைச்சரும், ஆட்சியரும் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்வர் கூறினார். இந்த கூட்டத்தில் மாவட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், அரசு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.