வேலூர், அக். 13 – வேலூர் ஸ்மார்ட் சிட்டி பணி களை விரைந்து முடிக்க கோரி நவம்பர் முதல் வாரத்தில் காத்தி ருப்பு போராட்டம் நடத்துவது என்று சிபிஎம் காட்பாடி மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காட்பாடி தாலுகா மாநாடு லத்தேரியில் நடைபெற்றது. ஏ.பழனியப்பன், எம்.மல்லிகா, கே.சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த உறுப்பினர் கே.தங்கவேல் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். லோ.நவீன் வரவேற்று பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் ஆர்.சுடரொளியன் வேலை அறிக்கையையும், கு.தருமன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், கே.ஜெ.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்ட செய லாளர் எஸ்.தயாநிதி மாநாட்டை நிறைவு செய்துபேசினார். தீர்மானங்கள் வேலூர் மாவட்டத்திலேயே முதன் முதலாக செஞ்சி ஊராட்சியில் அறிவிக்கப்பட்ட சமத்துவ சுடுகாட்டை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும் மீண்டும் சமத்துவ சுடுகாட்டை அதே இடத்தில் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காட்பாடி - வேலூர் சாலையில் காட்பாடி ரயில் நிலையம், சித்தூர் பேருந்து நிலையம் பகுதி களில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் மாற்றுப்பாதையை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. புதிய வட்டக்குழு 9 பேர் கொண்ட காட்பாடி தாலுகா குழுவின் செயலாளராக ஆர்.சுடரொளியன் தேர்வு செய்யப்பட்டார்.