வேலூர், ஜூலை 11 - வேலூர் சிப்பாய்ப் புரட்சி 218வது தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் ஆர்.கே.கவிதா பரிசளித்து பாராட்டினார். இந்திய விடுதலை போருக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி 1806 ஜுலை 10 ஆம் நாள் வேலூர் கோட்டையில் நடைபெற்றது. அதன் 218ஆம் ஆண்டு நினைவாக மகத்தான புரட்சியின் வீர வரலாற்றை மக்களிடையே குறிப்பாக மாணவர் களிடையே எடுத்துச் சொல்லும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி தமுஎகச, வேலூர் வாசிப்பு இயக்கம் ஊரீசு கல்லூரி வரலாற்று துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு, கவிதை மற்றும் ஓவிய போட்டிகளை நடத்தப்பட்டது. இதில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் கேடயங்களை கோட்டாட்சியர் ஆர்.கே.கவிதா வழங்கினார். இந்த நிகழ்விற்கு ஊரீசு கல்லூரி முதல்வர் (பொ) ஜெ.ஆனிகமலாப்ளாரன்ஸ் மற்றும் வேலூர் வாசிப்பு இயக்க தலைவர் முத்து.சிலுப்பன், தமுஎகச மாவட்ட தலைவர் சகுவரதன் ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. பேராசியர் முனைவர் எம்.பால்தினகரன் வரவேற்று பேசினார். தமுஎகச முன்னாள் மாவட்ட தலைவர் முல்லைவாசன் வேலூர் சிப்பாய்ப் புரட்சி விழா துவக்கவுரை யாற்றினார். போட்டிகள் குறித்து அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட தலைவர் பேரா சிரியை பெ.அமுதா தொகுப்புரை யாற்றினார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து, வேலூர் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் அ.மலர், ஊரிசு கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ஒய்.டேவிட் நரேஷ் பென்ஜமின், டிகேஎம் கல்லூரி முதல்வர் ஆர்.பானுமதி, ஆகியோர் பாராட்டுச் சான்றுகளை வழங்கி பேசினர். அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி.குணசேகரன், ராணிப்பேட்டை மாவட்ட துணைத்தலைவர் கா.பூபாலன், தமுஎகச முன்னாள் மாவட்ட தலைவர் ச.ஆறுமுகம், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணி, செயலாளர் எல்.ரஜினிகாந்த், துணைச்செயலாளர் கவிப்பித்தன், தலைமையாசிரியை மா.சினேகலதா, துணைத்தலைவர் த.ரஜினி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கல்லூரி மாணவர்களுக்கான போட்டி களையும் விழாவையும் வேலூர் கிளை நிர்வாகிகள் வாரா, கி.உமாநாத், இராம. சுடர்க்கொடி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நிறைவாக மாவட்ட செயலாளர் எஸ்.சுரேந்தி ரன் நன்றி கூறினார்.